The best troubleshooting place , சிறந்த தோஷம் தீர்க்கும் இடம்

 

நல்ல பரிகார ஸ்தலம்

The best troubleshooting place
The best troubleshooting place


The best troubleshooting place , 

சிறந்த தோஷம் தீர்க்கும் இடம் 

இன்றைய மக்கள் ஒரு உண்மையை மறந்து கொண்டிருக்கிறார்கள், இன்றைய மக்களுக்கு பல பிரச்சினைகளுக்கு காரணம் அவரவர் மனம் தான் காரணம், பிரச்சினையான மனோபாவத்தினால் பல பாவங்களை செய்கிறார்கள் அது சந்ததிகளுக்கும் தொடர்கிறது,

 குழந்தையின்மை திருமணதடை வேலையின்மை கடன்சுமை சதா பிரச்சினை என பல்வேறு வகையில் பாவத்தின் சம்பளத்தை பெறுகிறார்கள், இதையே பயன்படுத்தி சிலர் பரிகாரம் என்ற முறையில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள், சிலர் அந்த ஊர் கோயிலுக்கு போய் சாந்தி நிவர்த்தி செய்து கொள்ளுங்கள், இந்த ஊரில் உள்ள கோயிலுக்குத் தான் செல்லவேண்டும், இந்த யாகம் அந்த யாகம் என அலைகழிப்பை உண்டாக்குகிறார்கள் . இந்த பரிகார ஸ்தலங்கள் உண்மையானவை தான் என்றாலும் ஒரு முறை சென்று செய்வதால் மட்டும் எதுவும் விலகிவிடாது  யாரோ ஒருவருக்குத்தான் அவ்வாறு நிகழும் .

 இதையெல்லாம் முன்னமே அறிந்திருந்த நம் முன்னோர்கள் ஒரு மிக சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலத்தை  ஊருக்கு ஊர் கண்டிருந்தனர்  சகல துன்பங்களுக்கும் பரிகாரமாக விளங்ககூடியது அரசடி விநாயகர் மற்றும் நாகர்கள் மட்டுமே . இதை விட சிறந்த பரிகாரம் வேறேதும் இல்லை எனவும் நிரூபணமாக கண்டனர் .

 யாவரும் அந்த காலத்தில் இருந்தே தொடர்ந்து கடைபிடித்தனர் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆனது, கோரிக்கை அப்படியே நடந்தது, குறையில்லாமல் வாழ்ந்தார்கள், ஆனால் ஒரு சிலருக்கு அதன்மேல் நம்பிக்கை அற்று போனதற்க்கு காரணம் பொருமையின்மையும் நம்பிக்கையின்மையும் காரணமானது . இவர்கள்தான் ஜோதிடர்களையும் உசுப்பேற்றி ஏதாவது ஆலயம் இருந்தால் சொல்லுங்கள் எங்கு போனாலும் பலன் இல்லை என தொந்தரவு செய்வார்கள், ஜோதிடர்களும் வேறு வழியில்லாமல் அந்த ஊர். இந்த ஊர் சுற்றவிட்டனர், இன்று பரவிவிட்டது, ஆலய குருக்களும் பயன்படுத்திக் கொண்டனர்.

 எனினும் அன்று முதல் இன்றுவரை முதல் பரிகார இடமாகவும்  சகல துன்பங்களுக்கும் பரிகாரமாக விளங்ககூடியது அரசடி விநாயகர் மற்றும் நாகர்கள் மட்டுமே .

 சிறுவயது முதலே அரசமரத்தையோ பிள்ளையார் ஆலயத்தையோ சுற்றி வந்தவர்களுக்கு எக்குறையும் வந்ததில்லை அனுபவபூர்வமான உண்மை .

 அந்த காலத்தில் இவ்வளவு பரிகார ஸ்தலம் மக்களுக்கு தெரியாது கிடையாது . குழந்தையின்மை. திருமண பாக்கியம் கிட்டுவதற்க்கென  அனைத்துக்கும் ஊர் கோடியில் ஒரு குளம் இருக்கும் அதன் கரையில் ஓர் அரசமரம் அதனடியில் ஒரு பிள்ளையார் இரண்டு பின்னப்பட்ட பாம்பு சில இருக்கும் இதை 9 சுற்று சுற்றி வேண்டி கொள்ள சொல்வார்கள் வேண்டியபடியே நடந்தது .

 இது கால போக்கில் அரசமரத்தை சுற்றினால் கல்யாண ஆசை வந்துவிட்டது எனவே பரிகாரம் செய்கிறார்கள்  என யாராவது நினைக்கப்போகிறார்கள் என்று  கூச்சப்பட்டு கன்னியர்கள் ஒதுக்கினர் . நாளடைவில் அது மறைந்து கொண்டும் வருகிறது .

 ஒரு உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் அரச மரத்தை சுற்றி பலன் கிட்டாதவருக்கு வேறு எங்கும் பலன் கிடைக்காது, இது நிதர்சனமான உண்மை . தோஷம் உடைய யாவருக்கும் ஸ்ரீமகாலட்சுமி அருள் இருக்காது எனவே ஸ்ரீமகாலட்சுமி கடாச்சாரத்தை அங்குதான் முதலில் வசியபடுத்த முடியும் .

No comments:

Post a Comment

நல்லதே நினைப்போம்,நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் . நல் உள்ளங்களுக்கு ஆத்ம வணக்கங்கள் .