Anjali Muthra ,

 Anjali Muthra , அஞ்சலி முத்திரை அற்புதம்

Anjali Muthra

Anjali Muthra


அஞ்சலி முத்திரை

இரு கை உள்ளங்கைகளைச் சேர்த்து விரல்களைச் சேர்த்துக் கைகூப்பிய நிலை அஞ்சலி முத்திரையாகும் . உள்ளங்கைகளின் இடையே சிறிது இடைவெளி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும் .

வந்தவர்களை மனித நேயத்துடன் வரவேற்பது இம்முத்திரை . நமது நல்லெண்ணத்தைக் காட்டும் முத்திரை இது . இம் முத்திரை நல்ல நட்பை வளர்க்கும் , குருபகவான் திருவருளை பெற்றுத்தரும் , நவகிரகங்களை ஒன்றினைக்கும் முத்திரை இது .

 

இம்முத்திரையின் பலன்கள் :

1 . இம்முத்திரையை நமது நெஞ்சினருகில் வைத்துக் கொள்ளும்போது அமைதி கிடைக்கிறது .

2 . மூளையின் வலது இடது இருபகுதிகளையும் அமைதிப் படுத்துகிறது

3 . நமது நல்லவிதமான ஆசைகள் நிறைவேறுகின்றன .

4 . இறைவனுக்கு நமது நன்றியை தெரிவிக்கும் அடையாளம் இம்முத்திரை .

5 . வாழ்த்துக்கூறும் போதும் நன்றியைத் தெரிவிக்கும் போதும் இம்முத்திரை பயன்படுத்தப்படுகிறது .

6 . இறைவணை வணங்கப் பயன்படுத்தப்படுகிறது .

7 .இருஉள்ளங்கைகள் விரல்கள் இங்குள்ள பிரதிபலிப்புப் புள்ளிகள் அனைத்தும் தூண்டப்பட்டு உடல் நலம் பெறுகிறது .

8 . விரல் நுனிகளில் உள்ள சக்திப் புள்ளிகள் தூண்டப்பட்டு சக்தி அதிகரிக்கிறது

9 . சிநேக பாவம் சகோதரத்துவம் ஏற்படுகிறது .

10 .மனிதநேயம் வளருகிறது .


இம்முத்திரையை எந்த நேரத்திலும் செய்யலாம் .

No comments:

Post a Comment

நல்லதே நினைப்போம்,நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் . நல் உள்ளங்களுக்கு ஆத்ம வணக்கங்கள் .