Kubera Mudra in-depth training ,

 Kubera Mudra in-depth training  

குபேரமுத்திரை ஆழ்மன பயிற்சி 

Kubera Mudra in-depth training
Kubera Mudra in-depth training

குபேரமுத்திரை ஆழ்மன பயிற்சி

நீங்கள் நினைத்ததை வெற்றியாக்கித்தரும் குபேர முத்திரை. உங்கள் இலக்குகளை ஆழ்மனதில் விதைத்து விட்டால் அது அங்கே வேரூன்றிவிடும் . ஆலமரமாக பெரும் விருட்சமாக வளரும். உங்கள் இலக்குகளை ஆழ்மனதில் பதியவைக்க உதவும் ஒரு மிக முக்கியமான செல்வவரத்து பயிற்சியை இப்போது காண்போம் .

 நமது புராணங்களில் அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாக சித்தரிக்கப்படுபவர் குபேரன் . இந்த குபேரமுத்திரை பயிற்சியை தொடர்ந்து செய்து வரும்போது நமது கனவுகள் அனைத்தும் நனவாகும் . அனைத்து விதமான செல்வ வளங்களும் நம்மை வந்தடையும் . எனவேதான் இந்த முத்திரைக்கு குபேர முத்திரை என்று பெயரிட்டனர் .

 இந்தப் பயிற்சிக்கு மிகமிக முக்கியமான தேவை நம்பிக்கைதான்நான்கு கற்களை விட்டெறிவோம் .ஏதோ ஒரு மாங்காயாவது விழும் என்று நினைப்போடு இந்த முத்திரை பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும் . குறி பார்க்கும்போதே நிச்சயம் நம் குறி தப்பாது என்ற நம்பிக்கையோடு செயல்படுபவர்களுக்கு மிக அதிகமான பலன் மிகமிகக் குறுகிய காலத்திலேயே கிடைத்துவிடும் .

முதலில் இந்தப் பயிற்சியின் செயல்முறையை காணலாம் . பின்னர் இது எவ்வாறு நமது ஆழ்மனதில் வேலை செய்கிறது என்பதை விரிவாகக் காணலாம் .

செயல்முறை

 1 . ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து மூச்சை சில நிமிடங்கள் ஆழமாக இழுத்து விடுங்கள்

 2 . மனதையும் உடலையும் பதட்டம் இல்லாமல் அமைதிபடுத்துங்கள் .

 3 . சிறுவிரல் மோதிர விரல் இகிய இரண்டு விரல்களையும் மடித்து உள்ளங்கையை தொடவும் .

 4 . பிற மூன்று விரல்களின் ( பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் ) நுனிப்பகுதிகளும் ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும்படி இணையுங்கள் .

 5 . அழுத்தம் வேண்டாம் . சற்றே லேசாக தொட்டுக் கொண்டிருந்தால் போதும்

 6 . இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும் .

 7 . கைகளை தொடைகளின் மேல் வைத்துக் கொள்ளுங்கள்

 8 . உள்ளங்கைகள் வான் நோக்கி இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள் .

 அமரும் முறை

 1 . யோகாசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்தும் செய்யலாம் .

 2 . ஆசனங்களில் பரிச்சயம் இல்லாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்து செய்யலாம் .

3 . கால்களை மடக்கி அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலில் அமர்ந்தும் ( உள்ளங்கால்கள் நன்கு தரையில் பதிந்திருக்க வேண்டும் ) செய்யலாம் .

4 . கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும் .

 சுவாசம்

1 . சுவாசம் சீராகவும் இயல்பாகவும் இருக்கட்டும் .

 2 . சிரமப்பட்டு மூச்சை இழுத்து இழுத்து விடவேண்டிய அவசியம் இல்லை .

 3 . கும்பகம் வேண்டாம் அதாவது மூச்சை வயிற்றில் அடக்காமல் இயல்பாக இருக்கவும் .

மனநிலை

1 . மனம் அமைதியாகவும் செய்யும் முத்திரையின்மீது குவிந்தும் இருக்க வேண்டும்

 இலக்குகள் குறித்து தியானம்

1 . குபேர முத்திரையில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்திய பின்னர் உங்களது குறுகிய கால இலக்கு குறித்து மனதில் தியானியுங்கள்

 2 . அந்த இலக்கு நிறைவேறிவிட்டதாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள்

 3 . உங்களது இலக்கு நிறைவேறும்போது உங்களது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்தும் மனதில் தியானியுங்கள்

 4 . அந்த இலக்கு நிறைவேறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன?

 5 . அந்த இலக்கை அடைய நான் செய்ய வேண்டியது என்ன ?

 6 . இந்த இலக்கை நான் அடைய யார் யார் எனக்கு உதவ முடியும்?

 7 . முத்திரை செய்தபடியே ( கண்களை மூடி ) உங்களது இலக்கு குறித்து பல கோணங்களில் சிந்தித்து சந்தோஷமாக தியானம் செய்யுங்கள் .

 8 . இந்த தியானங்களின் போது பல புதிய கோணங்கள் புதிய உத்திகள் செயல்முறைகள் உங்களுக்குத் தோன்றக்கூடும் .

 9 . தியானம் முடிந்தவுடன் அவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் .

 10 . அடுத்த முறை முத்திரை பயிற்சியை செய்யும்போது இந்தப் புதிய சிந்தனைகளை தியானம் செய்யுங்கள் .

 11 . இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யச் செய்ய இதுவரையில் உங்களுக்கு தோன்றாத பல புதிய வழிகள் புலப்படும் . உங்கள் இலக்கினை நீங்கள் அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டல் கிடைக்கும் . அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முடிந்ததை பின்தொடருங்கள் நிச்சயம் வெற்றி உண்டாகும் .

 எவ்வளவு நேரம் செய்யலாம்

 1 . குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் வீதமும் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் வரையில் செய்யலாம் . ஒரு நாளில் இரண்டு முறை செய்யலாம் .

 எப்போது எந்தவேளையில் செய்வது ?

1 . காலையில் எழுந்தவுடன் வெறும்வயிற்றில் செய்வது மிக நல்லது

 2 . காலை வேளையில் மனம் அமைதியாக இருக்கும் . தியானம் எளிதில் கைகூடும் .

 3 . காலை வேளையில் செய்யும் போது அன்றைய தினம் ( உங்கள் இலக்கினை அடைய ) நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள் குறித்த வழிகாட்டுதல் கிடைக்கும் . அதை அப்படியே பின்பற்றுங்கள் .

 4 . இரவில் தூங்கச் செல்லும் முன்னும் ஒருமுறை இந்தப் பயிற்சியை செய்துவிட்டுப் படுக்கலாம் ( சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை ) .

 5 . இதனால் உங்கள் இலக்கு மனதில் ஆழமாகப் பதிந்துப்போகும் .

 6 . நாம் துாங்கும் போதுகூட நமது ஆழ்மனது வேலை செய்து கொண்டுதான் இருக்கும் . நமது இலக்கு குறித்து அது தொடர்ந்து சிந்திக்கும் .

 7 . தூக்க நிலையிலும் ஆழ்மனதிலிருந்து சில செய்திகள் நமக்குக் கிடைக்கும் . இவை பெரும்பாலும் கனவுகளாகவே வரும் .

 8 . இப்படி கனவுகளில் வரும் செய்திகளையும் தியானம் செய்யுங்கள் உதாசீனப்படுத்தாதீர்கள் .

 எவ்வளவு நாட்கள் செய்வது 

1 . குறுகிய கால இலக்குகள் குறித்து தினமும் இந்தப் பயிற்சியில் அமர்ந்து தியானம் செய்யவும்

 2 . குறைந்த பட்சம் மூன்று மாதங்கள்  வரை செய்யலாம் . தவறில்லை .

 3 . நீண்ட கால இலக்குகள் குறித்து வாரம் ஒருநாள் இந்தப் பயிற்சியில் அமர்ந்து தியானம் செய்யவும் .

 4 . உங்களது நீண்ட கால இலக்குகள் நனவாகும் வரையில் தொடர்ந்து செய்யலாம் .

 குறிப்பு 

1 . இலக்குகளுக்காக மட்டுமின்றி வேறு சிறுசிறு விஷயங்களுக்காகவும் கூட நீங்கள் இந்த முத்திரையை செய்யலாம் .

 2 . உதாரணமாக உங்களது தொழில் சம்பந்தமாக ஒரு நபரை நீங்கள் சந்தித்து செல்லும் முன்னர் இந்தப் பயிற்சியில் அமர்ந்து அந்த நபரின் உருவத்தை உங்கள் மனக்கண்ணில் கொண்டு வரவும்.

 3 . உங்களுக்கு சாதகமாக அவர் நடந்து கொள்ளவேண்டும் என தியானியுங்கள் .

 4 . இந்தப் பயிற்சியை செய்துவிட்டு நீங்கள் அந்த நபரை சென்று சந்தித்தால் நீங்களே எதிர்பாராத வகையில் அவர் உங்களுக்கு சாதகமான காரியங்களை செய்வார் .

 5 . அரசாங்க உரிமங்கள் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தாலும்கூட இந்த முத்திரையை பயன் படுத்தலாம்

 6 . உதாரணமாக உங்களது தொழிலுக்கான ஒரு உரிமம் மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து கிடைக்க வேண்டியிருக்கிறது என்றால் இந்த முத்திரையில் அமர்ந்து இந்த உரிமம் எனக்கு கிடைக்க வேண்டும் என தியானம் செய்யுங்கள் . பலன் சில நாட்களிலேயே தெரியும் .

 7 . உங்களது வழக்கு ஏதேனும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தால் இந்த முத்திரையில் அமர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவேண்டும் என தியானம்செய்யுங்கள் . சாதகமான தீர்ப்பு கிடைக்கும் .

 8 . ஆனால் நியாயம் உங்கள் தரப்பில் இருந்தால் மட்டுமே உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என்பதையே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஆக நியாயமான பிராத்தனைகள் நிச்சயம் நடக்கும் .

 குபேர முத்திரை எப்படி வேலை செய்கிறது ?

நமது வெளிமூளை வெளிமனம் ஆகியவற்றைவிட உள்மூளையும் ஆழ்மனமும் மிகமிக அதிக சக்தி வாய்ந்தவை என்பதை அறிக

 விழிப்பு நிலையில் வெளிமூளையும் மனமும் மட்டுமே செயல்புரியும் . ஆழ்மனதின் செயல்பாடுகளை விழிப்பு நிலையில் உணரமுடியாது .

 குபேர முத்திரையை செய்யும்போது வெளிமனதின் ஆரவாரங்கள் அடங்கிவிடுகின்றன . புலன்களின் செயல்பாடுகளும் படிப்படியாகப் கட்டுப்படுவதில் வெளிமூளையின் செயல்பாடுகளும் படிப்படியாகக் குறைகின்றன .

 வெளிமூளை விழிப்பு நிலைக்கும் ஆழ்ந்த தூக்க நிலைக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை ( இதை ஆல்பா ஸ்டேட் என்பார்கள் ) அடைகிறது . இந்த நிலையில் வெளிமூளையின் செயல்பாடுகள் அடங்கி உள்மூளையும் ஆழ்மனமும் திறக்கப்படுகின்றன .

 மெஸ்மரிசம் இப்னாட்டிசம் போனறவற்றிலும் இதுவேதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 ஆழ்மனது திறந்துகொள்ளும்போது உங்களது இலக்குகளை நீங்கள் அங்கே விரித்து விடும் போது அது அங்கே ஆழமாக பதிந்து போகிறது .

 ஆழ்மனம் மிக சக்தி வாய்ந்தது என்பதை ஏற்கெனவே கண்டோம் . கடந்த பிறவிகளில் நீங்கள் பெற்ற அறிவு அனுபவங்கள் அனைத்தும் அதில் பதிவாகியுள்ளன . பிரபஞ்ச ஞானத்துடன் ஆழ்மனம் நேரடித் தொடர்பில் உள்ளது .

வெளிமனம் நாம் சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் ஒரு கணினிப்போன்றது . ஆழ்மனம் சூப்பர் கணினி மிகமிக சக்தி வாய்ந்தது . நமது பிரச்சனைகளுக்கான விடைகளை அது உடனுக்குடன் அலசி ஆராய்ந்து கூறிவிடும் .

 நமது வெளிமுளையின் சிந்தனையால் நாம் அறிந்து கொள்ள முடியாத புரிந்து கொள்ள முடியாத பல சிக்கல்களுக்கு உள்மூளைஎளிதாகப் பதில் கூறிவிடும் .

 குபேர முத்திரையை செய்துவிட்டு நீங்கள் சோம்பி வீட்டிலேயே இருந்தால் குபேரன் வந்து செல்வத்தை கொட்டிவிட மாட்டான்

 குபேர முத்திரைப் பயிற்சியில் உங்கள் இலக்குகளை நீங்கள் அடைவதற்கான வழிமுறைகள் உங்களுக்குப் புலப்படும் . அவற்றை கெட்டியாகப் பிடித்துகொண்டு முழுமனது்ன் உழைக்க வேண்டும் .

 வியர்வைதான் வெற்றியின் ரகசியம்  என்பதை நினையில் வைத்துக் கொள்ளுங்கள் . அதிக வியர்வையின்றி சாதிக்கும் தந்திரத்தை தந்திரயோகம் கற்றுத்தரும் .

 நமது ஆழ்மனம் நமக்கு வழிகாட்டும் என்பது சரி . ஆனால் குபேர முத்திரையைச் செய்துவிட்டு ஒருவரை நாம் சென்று சந்திக்கும் போது  அவர் நமக்கு சாதகமாக செயல்படுவார் என்றால் அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி மனதில் எழுகிறதல்லவா

எண்ணங்கள் என்பதும் ஒருவகை சக்தியே . வெளிமனதின் சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் கூட சக்தி உண்டு . ஆனால் ஆழ்மனதிலிருந்து வரும் எண்ண அலைகள் பல மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை .

குபேர முத்திரையில் அமர்ந்து ஒருவரது உருவத்தை மனக்கண்ணில் கொண்டுவந்து அவர் நமக்குச் சாதகமாக செயல்பட வேண்டும் என தியானிக்கும் போது ஆழ்மனதிலிருந்து உருவாகும் எண்ண சக்தி அலைகள் அந்த நபரின் ஆழ்மனதை ஊடுருவும் . தம்மை அறியாமலேயே அந்த நபர் நமக்கு சாதகமாகச் செயல்புரியத் துவங்கி விடுவார் .

 


No comments:

Post a Comment

நல்லதே நினைப்போம்,நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் . நல் உள்ளங்களுக்கு ஆத்ம வணக்கங்கள் .